குறும்பா 3 (குறுந்தொகை 95)

மே 11, 2012 குறும்பா குறுந்தொகை

முரடனா இருந்தேன். அவ வந்தவுடனே -நெருப்புமேல தண்ணியக் கொட்டுனா விஷ்ஷ்னு சத்தம்வந்து அடங்கற மாதிரி- அடங்கிட்டேன்.

இதோ மலைக்காட்டுல நிக்கறேன். இங்கதான் எங்கேயோ அவ வீடு இருக்கு. உயரத்துலேர்ந்து அருவி கொட்டுது. கீழ பாறமேல விழறப்ப விஷ்ஷ்னு சத்தம் போட்டுக்கிட்டே விழுது. விழுந்து பாறை இடுக்குகவழியா ஓடுது. நா மொதல முரடனாதான் இருந்தேன். அவ வந்தவுடனே -நெருப்புமேல தண்ணியக் கொட்டுனா விஷ்ஷ்னு சத்தம்வந்து அடங்கற மாதிரி- அடங்கிட்டேன். என்னோட மொரட்டுத்தனம் எல்லாம் எங்கேயோ வழிஞ்சு ஓடிருச்சு.

மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே

(கபிலர்)

< பின் ⌂ முகப்பு