நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
ஒளவை எழுதிய புறநானூறு (187) பாடல்.
Poem by Auvai in Purananooru collection (no. 187)
| நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் எங்கே நல்ல மனிதர்கள் உள்ளாரோ அங்கே நன்றாக வாழ்வாய் நிலமே |
Whether in city or in forest wild, Whether in valley low or on mountain piled, Where people of virtue reside, There, O Land, you thrive and abide. |
ஔவையின் அபாரமான எளிமையான பாடல். கூரிய எளிமை என்று சொல்லலாம். மனிதர்களின் எண்ணிக்கை அல்ல, மனிதர்களின் “நல்லைத்தனம்” தான் ஒரு நிலம் செழிப்படைய காரணம். எப்போது ஜனநாயகம் எடுபடும், எப்போது முன்னோக்குடையோரின் (தீர்க்கதரிசிகள்) பங்கு இன்றியமையாதது என்பது மிக முக்கியம்.