குறும்பா 1 (குறுந்தொகை 157)

அய்யோ கோழி கூவிருச்சு. வாள் கிழிக்கிறமாதிரி, சூரியக்கதிர் எங்க இரண்டுபேரையும் பிரிச்சுருமே. மனசு பக்பக்னு இருக்கு.

வெளிய கோழி கூவுறச் சத்தங் கேக்குது. அதுக்குள்ளப் பொழுது விடிஞ்சுருச்சா ? இன்னைக்கு அவரப் பிரியற நாளாச்சே. கூரியவாள் கிழிக்கிறமாதிரி சூரியக்கதிர் எங்க இரண்டுப்பேரையும் பிரிக்கப்போவுதே. என் நெஞ்சு முழுக்க அச்சம் நிரம்பி ரொம்ப கனக்குதே.

குக்கூ வென்றது கோழி யதனெதிர்
துட்கென் றன்றென் றூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே

(அள்ளூர் நன்முல்லையார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.