குறும்பா 2 (குறுந்தொகை 32)

காலை, மதியம், மாலை, இரவு இப்படிலாம் தனித்தனியா உணரமுடிஞ்சுச்சுனா அது காதலே இல்லியாம்.

என்னோடக் காதல் உண்மையானது. நானும் அவளும் சேர்ந்திருந்தபோது, எது காலை, எது மதியம், எது மாலை, இரவு என்றுகூட தெரியாம, ஒரு கனவுல மொதக்கறமாதிரி வாழ்ந்தேன். அவ இப்போ பிரிஞ்சு போய்ட்டா. ஆனா, அதுக்காக எங்களோடக் காதல ஊர்முழுக்க டமாரம் அடிக்கமாட்டேன். அப்படிச் செஞ்சா ஊர்காரங்க எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவெப்பாங்க. ஆனா அதுவே அவள அவமானப்படுத்தறமாரி ஆகிடும். ஆனா, கல்யாணம் செய்யாமலும் இருக்கமுடியாது. சாகறதுதான் ஒரே வழியா ?

காலையும் பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே

(அள்ளூர் நன்முல்லையார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.