குறும்பா 4 (குறுந்தொகை 152)

தோழீ, சீக்கிரம் அவரவந்து என்னைப் பெண்கேக்கச்சொல்லு, தாயில்லா ஆமைமுட்டைபோல மனசு நொறுங்கிட்டு இருக்கு.

அவர் என்னப் பிரிஞ்சுப் போய்ட்டார். அதனால நா கல்யாணம் பண்ணிக்காம ஒக்காந்து இருக்கேன். எல்லாரும் என்னச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச்சொல்லிக் கேக்குறாங்க. அதனால என் மனசு ரொம்ப நோவுது. அவங்களுக்கு என்னத் தெரியும். கடலோரத்துல தாய் ஆமை மண்ணுக்குள்ள முட்டை இடும். தாய் ஆமைக்கு ஏதாவது ஆச்சுன்னா, அந்த முட்டைங்க தாய் இல்லாததுனால, அப்படியே ஒடஞ்சு, அழுகி, மண்ணுக்குள்ளேயேப் பொதஞ்சுடும். அதுமாதிரிதான், அவரில்லாம என் மனசும் உள்ளேயே நொறுங்கிட்டு இருக்கு. தோழி, அவர எப்படியாவதுப் பாத்துப் பேசி, சீக்கிரம் வந்து என்னைப் பெண்கேக்கச்சொல்லு.

யாவது மறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே

(கிளிமங்கலங்கிழார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.