குறும்பா 6 (குறுந்தொகை 156)

நீ பிரிக்கப் போறக் காதலச் சேர்த்துவைக்க நீ படிச்ச வேதத்துல ஏதும் பரிகாரம் சொல்லியிருக்கா என்ன? கொஞ்சம் நீயே சொல்லேன்.

பார்ப்பன நண்பா, நீதான் சிவப்புப்பூப் பூக்குறப் புரசமரத்துப் பட்டைய நீக்கிட்டு, அதோடத் தண்டுலேர்ந்துச் செஞ்ச கமண்டலம் வெச்சுருக்க; தினமும் விரத உணவு மட்டும் சாப்பிட்டு இப்படி ஒல்லியா இருக்குற; நாலு வேதத்தையும் வேற கரைச்சுக் குடிச்சுருக்கியே; வேதத்துல, தலைவனும் தலைவியும் பிரிஞ்சா, திரும்பவும் சேரறதுக்குப் பரிகாரம் ஏதும் சொல்லியிருக்கா என்ன? கொஞ்சஞ் சொல்லேன்.

என்ன திகைச்சுப் போயிட்டியா. ஆமா, நீதான் நானும் அவளும் காதலுல அடுத்தப்படி, காமத்தநோக்கிப் போகக்கூடாது, நாங்க ரெண்டுப்பேரும் பிரிஞ்சுப் போயிரணும்னு மனசுல நெனைக்கிறியே; எனக்குத் தெரியாதா என்ன !

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே

(பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.