குறும்பா 8 (குறுந்தொகை 37)

ஆண் யானை யாமரத்த வேரோடப் பிடுங்கி, பட்டைய உரிச்சு வரத் தண்ணியப் பெண் யானைக்குக் கொடுக்குற அன்புதான் அவர்கிட்டேயும் இருக்கு.

தோழி, உன் காதலர் வணிகத்துக்காகதானே போயிருக்கிறார். உனக்காகத் தானே, இவ்வளவு சிரமப்பட்டு, தண்ணியில்லாப் பாலைநிலம் வழியா போயிருக்கிறார். நீ பாலைநெலத்தப் பாத்ததில்லதானே. அங்க எந்த உசுருக்குமே தண்ணியே கெடைக்காது. அப்போ, ஆண் யானை என்ன செய்யும் தெரியுமாடி? யாமரம் இல்ல யாமரம்; அத அப்படியே வேரோடப் பிடுங்கி, கஷ்டப்பட்டுப் பட்டைய உரிச்சு, அதுலேர்ந்து வரத் தண்ணியப் பெண் யானைக்குக் கொடுக்கும். அதே அன்புதான் உங் காதலர்கிட்டேயும் இருக்கு. நீ மகிழ்ச்சியா இருக்கணும்னுதான், என்ன துன்பம்வந்தாவது பரவாயில்லனு இவ்வளவு தூரம் போயிருக்கார். அந்த யானைக்காட்சியப் பாத்தா உன் ஞாமகம் சட்டுன்னு வந்துரும். சீக்கிரம் திரும்பிருவார்.

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே

(பாலைபாடிய பெருங்கடுங்கோ)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.