குறும்பா 12 (குறுந்தொகை 8)

கனிஞ்ச மாம்பழம் குளத்துல விழுது. வாளைமீனு அதக் கவ்விச் சாப்புடுது. தோப்புக்காரர் யாரக் குத்தஞ் சொல்றது? மீனையா, பழத்தையா?

வயல் பக்கத்துல உள்ள மாந்தோப்புல தொங்கற இனிப்பான பழம் கனிஞ்சு, பக்கத்துல உள்ள சிறிய குளத்துல விழும். கொளத்துல உள்ள வாள மீனு அதக் கவ்விச் சாப்புடும். அய்யயோ, பழத்தச் சாப்ட்டுட்டியேன்னு மீனக் குத்தஞ் சொல்ல முடியுமா. அதுமாதிரிதான், என்னை ஏன் குத்தஞ் சொல்றீங்க. அவனாத்தான் என்னைத்தேடி, இந்தப் பரத்தையத் தேடி, வந்தான்.

எங்கூட இருக்கிறப்போ என்னை வருணிக்கிறமாதிரி அழகாப்பேசுவான். அவன் நெனைக்கிறப்படி பேசிச்சிரித்து மகிழ்ச்சியா இருந்தான். இப்ப அவன் வீட்டுக்குப் போனப்புறவு என்ன ஆச்சுத் தெரியுமா? பாவைக்கூத்து பொம்மயோட கையும் காலும், கட்டுப்படுத்தறவங்களோட அசைவுக்கு ஏத்தமாதிரி ஆடும். அதுமாதிரி ஆய்ட்டான்.

ஒவ்வொரு மகனும் தன் தாயைத்தான் விழுந்து விழுந்து கவனிப்பாங்க. ஆனா, அவன் தன் பொண்டாட்டி சொன்னதயெல்லாஞ் செஞ்சுட்டு இருக்கான். ஹ.

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே
(ஆலங்குடி வங்கனார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.