குறும்பா 16 (குறுந்தொகை 2)

புதுசா குளிச்சுட்டு, தலைய லேசா சாய்ச்சு, பருத்தியால துவட்டிட்டு, நடந்து வர்ற காதலியே. உன் கூந்தலுக்கு என்ன மணம் தெரியுமா !

ஏ காதலியே. புதுசா குளிச்சுட்டு, தலைய லேசா சாய்ச்சு, பருத்தியால துவட்டிட்டு, நடந்து வர்ற காதலியே. உன் கூந்தலுக்கு என்ன மணம் தெரியுமா ! அங்கப் பாரு. நம்ப பூந்தோட்டத்துல அந்த வண்டு ரீங்காரமிட்டிருக்கு இல்ல. அதுக்கிட்ட கேட்டேன். ஏய் தும்பி, நீதான் தெனம்தெனம் அத்தனப்பூக்கள ஆராஞ்சு, மகரந்தத்தச் சேமிச்சுட்டு இருக்கற வாழ்க்கையையே வாழ்ந்துட்டு இருக்கியே, உண்மையச் சொல்லு. என் வீட்டுப் பூவச் சுத்திட்டு இருக்கறதுனால என்கிட்ட பொய் சொல்லக்கூடாது. எங்கிட்ட உயர்வான சிறந்த நட்பையும், மயிலமாதிரி மென்மையும், அழகா வரிசையா நெருக்கமா பற்களயும் உடைய எங்காதலியோட கூந்தலவிட நறுமணமுள்ள பூ உலகத்துல இருக்கா என்ன ?

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே

(இறையனார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.