குறும்பா 17 (குறுந்தொகை 401)

சிரிச்சுப்பேசி, கிண்டல் செஞ்சு ஆரமிச்ச எங்க நட்பு, அவன் உடல அனுபவிக்கிறவர போச்சு. ஆனா ஏன் திடீர்னு நின்னுருச்சு.

கடற்கர ஓரமா படர்ந்துருக்குற அடும்புகொடியோட பூவத் தண்ணீலக்கொட்டி, நெய்தல்பூ மாலைய அணிஞ்சு விளையாடிட்டு இருந்தோம். தண்ணீல முக்கிஎழுந்தா கூந்தல்ல தண்ணிசொட்டி சில அடும்புப்பூ கூந்தல்ல மாட்டிக்கும். இப்படி நாங்க விளையாடுறதப் பாத்து, நண்டுங்க பயந்துட்டு கடலுக்கு ஓடிடும். அப்பேற்பட்ட ஒருநாள்தான் அவனப் பாத்தேன். எங்க நட்பு, சிரிச்சுப்பேசி, கிண்டல் செஞ்சு வெளையாடறதுலேர்ந்து ஆரமிச்சுது. அப்படியே அவன் உடல அனுபவிக்கிறவர போச்சு. ஆனா ஏன் திடீர்னு நின்னுருச்சு. இது ரொம்ப வியப்பா இருக்கு. நான் ரொம்ப வேகமா இருந்துட்டேனா ?

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சி யீர்ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே

(அம்மூவன்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.