குறும்பா 18 (குறுந்தொகை 371)

கையில உள்ள வளையல்கள் நெகிழ்ந்து அழறமாதிரி இருக்கு. உடம்பு சோர்ந்து வெளிறிப்போச்சு. இந்தக் காமநோய் என் அறிவையே மயக்கிடுதே.

தோழி, நமக்கு மலையோரத்துல, மேகம்லாம் சூழ்ந்தமாதிரி நிலம் இருக்கு. அங்க நாம நெல்லப் பயிரிட்டு இருக்கோம். மலையில கொட்டுற அருவியப் பயன்படுத்தி தண்ணி பாய்ச்சிட்டு இருக்கோம். இந்த வேலையெல்லாம் பார்வையிட அவர் போயிருக்கார்.

இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சும், எங்கையில உள்ள வளையல்கள் நெகிழ்ந்து, உருகி அழறமாதிரி இருக்கு. என் உடம்பு சோர்ந்து வெளிறிப்போச்சு. இந்தக் காமநோய், என் அறிவையே மயக்கிடுதே.

கைவளை நெகிழ்தலு மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பி னைவனம் வித்தி
அருவியின் விளைக்கு நாடனொடு
மருவேன் றோழியது காமமோ பெரிதே

(உறையூர் முதுகூற்றன்)

தேட ஆரம்பியுங்கள் / Start typing to search