குறும்பா 19 (குறுந்தொகை 337)

அவள் இப்படிப் பருவம் வாய்த்து என்னை வாட்டுகின்றாள். ஆனால் என்னை வாட்டுவது அவளுக்கே தெரியாது.

அவள் முலைகள் அரும்பி நிற்கின்றன. தலையில் அழகிய கூந்தல் புதிதாக வளர்ந்து, தோளின்மீது படர்ந்து, பின்பக்கமாக வீழ்கின்றன. முதன்முறையாக பற்கள் வீழ்ந்து, மீண்டும் அழகான, வரிசையான, வெண்மையான பற்கள் செதுக்கப்பட்டதுபோல் முளைத்து நிற்கின்றன. கன்னத்தில் ஒளிக்கீற்றாக சில பருக்களும் ஒட்டியிருக்கின்றன. அவள் இப்படிப் பருவம் வாய்த்து என்னை வாட்டுகின்றாள். ஆனால் என்னை வாட்டுவது அவளுக்கே தெரியாது. தோழி, பெரும் செல்வந்தரின் மகளான அவள், எப்படிப்பட்டவள்; கொஞ்சம் விவரியேன்.

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்குவீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே

(பொதுக்கயத்துக் கீரந்தை)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.