குறும்பா 22 (குறுந்தொகை 44)

வான்ல இருக்குற நட்சத்திரங்களப்போல நெறைய பேரு எதிர்ல வராங்க, ஆனா யாருமே ஓடிப்போன எம்மகளோ அவனோ இல்ல.

ஓஒ.. எங் காலு ரெண்டும் நடந்து நடந்து சோர்ந்து ஓஞ்சுருச்சு. எங் கண்ணு ரெண்டும் பார்த்துப் பார்த்து கலங்கி, ஒளி மங்கிப்போச்சு. எம் மகளும், அவனும் தனியாப் பிரிஞ்சு வேற ஊருக்குப் போய்ட்டாங்க. நான் அவங்களத் தேடிட்டுத்தான் இவ்வளவு தூரம் இந்தக் காஞ்ச பாலை நெலம் வழியா நடந்துட்டு இருக்கேன். எதிர்ல வர்றவங்க ஒவ்வொருத்தரையும் பார்த்து, இது அவங்களா இருக்கனுமே, இது அவங்களா இருக்கனுமேன்னு மனசு ஏங்குது.

இப்படிப் பாத்துப்பாத்து, கண்ணு மங்கி, எதிர்ல வர்றவங்க யாரப் பாத்தாலும் அவங்களாவே தெரியுது. ஆனா, பக்கத்துல போய் பார்த்தாத்தான், அவங்க இல்லன்னு தெரியுது. இப்படி, பெரிய அகண்ட வானம் மாதிரி இந்தப் பாலைநிலம். எண்ணிக்கையற்ற நட்சத்திரங்களப்போல, நெறைய பேரு வராங்க, ஆனா யாருமே அவங்க இல்ல.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே

(வெள்ளி வீதியார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.