குறும்பா 23 (குறுந்தொகை 160)

இப்படி என்ன பாக்கக்கூட முடியாம இருக்கற அவர், இங்க வந்து கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்கப் போறாராக்கும்.

இந்த நட்டநடு ராத்திரியில், இதைவிட கருமையில்லை என்று சொல்லறமாதிரி இருக்கிற ராத்திரியில், நெருப்புப்போல செந்நிறமான தலையக்கொண்ட ஆண் அன்றில் பறவையும், இறாலப்போல வளைஞ்ச அருவாப்போல அலகக்கொண்ட பெண் அன்றில் பறவையும், தடா மரத்துமேல கட்டியிருக்கிற கூட்டுல உட்கார்ந்து, சேர்ந்து ஒலியுழுப்பி அளவளாவிட்டு இருக்கு. குளத்துலேர்ந்து எழற குளிர்ந்த வாடைக் காற்று வீசிட்டு இருக்கு. அவரு இன்னிக்கும் வரல தோழி. அவரு வர்றபோதே எனக்கு, ஒருவிதமா காத்துல வாசன வர்றமாதிரி, தெரிஞ்சுரும். இப்படி என்ன பாக்கக்கூட முடியாம இருக்கற அவர், இங்க வந்து கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்கப் போறாராக்கும்.

நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரைவே

(மதுரை மருதன் இளநாகன்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.