குறும்பா 25 (குறுந்தொகை 202)

நெருஞ்சிச்செடி மொதல்ல அழகா மஞ்சநெறமா பூவு பூத்துநிக்கும். ஆனா கொஞ்சநாள் கழிச்சுப்பாத்தா, முள்ளா நெறஞ்சு கெடக்கும்.

என் நெஞ்சு வருந்துதுடீ; வருந்துது.

முல்லநெலத்துல பூக்குற நெருஞ்சிச்செடியப் பாத்திருக்கியாடீ. சின்னச்சின்ன எலைங்களுக்கு நடுவுல, மொதல்ல அழகா மஞ்சநெறமா பூவு கண்ணுல ஒத்திக்கிறமாதிரி பூத்துநிக்கும். ஆனா கொஞ்சநாள் கழிச்சுப்பாத்தா, செடிமுழுசும் முள்ளா நெறஞ்சு கெடக்கும்.

மொதல்ல நல்லவன்மாதிரி இனிமையா என்கிட்ட பேசுன அவன், இப்போ பாரு, என்னவிட்டுட்டு அவக்கூட சுத்திகிட்டு இருக்கான். என் நெஞ்சுல முள்ளு குத்திக் கிழிச்சாப்போல வலிச்சுட்டு இருக்கு.

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே

(அள்ளூர் நன்முல்லை)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.