குறும்பா 26 (குறுந்தொகை 25)

அந்தக் கள்வன்மட்டும் வந்து பெண் கேக்கலேன்னா நா என்ன செய்வேன் ! அபூர்வமா கண்லப்படற செங்குருகுமட்டுந்தான் சாட்சியா இருந்துச்.

நானூ அவனூ களவுமணம் செஞ்சுகிட்டப்போது வேற யாருமே பக்கத்துல இல்ல. அவன் கொஞ்ச கிழமையிலேயே வந்து திருமணத்துக்குப் பெண் கேப்பதாச் சொல்லியிருந்தான். அந்தக் கள்வன்மட்டும் வந்து என்னப் பெண் கேக்கலேன்னா, நா என்ன செய்வேன் ! தினைப்பயிரோடக் காலமாதிரி சின்னதா மென்மையானக் காலக்கொண்ட செங்குருகு, வயல்பக்கத்துல ஓடுற நீருல ஆரல்மீன எதிர்ப்பாத்து, புதர்ல மறஞ்சு காத்துட்டு இருக்கும். அதக் கண்லகாண்றதே அதிசயம். அப்படி அபூர்வமா கண்லப்படற செங்குருகுமட்டுந்தான் எங்க களவுக்குச் சாட்சியா இருந்துச்.

யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

(கபிலர்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.