குறும்பா 27 (குறுந்தொகை 163)

யே கடலே, இந்த நடுநிசியிலூ ஓயாம ஒஞ்சத்தங் கேக்குது. நீ யார நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டு, என்னப்போலவே தூங்காம இருக்க ?

பூழியரோட சின்னத்தலையக் கொண்ட வெள்ளாடுகளமாதிரி, குருகு பறவைங்க வெள்ளக்குவியலா கடற்கரையோரமா இருக்குற சோலையில தூங்கிட்டு இருக்கு. அந்தச் சோலையச் சூழ்ந்த துறையில வெள்ளையாப் பூப்பூத்துருக்குற தாழைப்புல்லுக மேல, அலையடிக்கிற கடலே, சில்வண்டுக நள்ளுன்னு சத்தம் பண்ணிட்டு இருக்குற இந்தக் கருமையான நடுநிசியிலூ ஓயாம ஒஞ்சத்தங் கேக்குது. நீ யார நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டு, என்னப்போலவே தூங்காம இருக்க ?

யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே

(அம்மூவன்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.