குறும்பா 29 (குறுந்தொகை 244)

நா நவுறவேமுடியாதமாதிரி என்னக் கட்டிப்பிடிச்சு என்தாய் தூங்குறா. நா என்ன பண்ணட்டூ.

எல்லாரூ தூங்குற, பேரமைதியான, செவுத்துக்கோழிமட்டும் நள்ளுன்னு சத்தம்போட்டுட்டு இருக்குற ராத்திரியில வந்து நீ கதவத்தட்டித் திறக்கப் பாத்தத, நா கேக்காம இல்ல. கேட்டேன். மொதலக்கிட்ட மாட்டுன யானையோட வலிமாதிரி நெஞ்சுல வலியோடயூ ஏக்கத்தோடயூ நீ திரும்பியிருப்ப. அழகான மயில், வலையில மாட்டிகிட்டா, அதோட கொண்ட செதஞ்சு, தோக உதிஞ்சு, அதால ஒன்னுமே பண்ண முடியாம ஆயிடும். அதுமாதிரிதான், நா நவுறவேமுடியாதமாதிரி என்னக் கட்டிப்பிடிச்சு என்தாய் தூங்குறா. நா என்ன பண்ணட்டூ.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே

(கண்ணன்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.