குறும்பா 30 (குறுந்தொகை 117)

அவன நெனச்சு நெனச்சு மெலிஞ்சுப் போனாலும், உன்னோட மெலுசான கைக்கு வளையக்காரங்கிட்ட சின்னதா வளை இருக்காதா என்ன? இருக்கூ.

செறகுமேல தண்ணி படர்ந்து - மழையில நனஞ்ச ஆம்பலப்போல - கொக்கு, தண்ணீயே கவனமா பாத்துட்டு கிடுக்கு. அதோட பார்வயிக்கி அஞ்சி, நண்டு, கண்டல்வேருக்கு எடேயில உள்ள வளைக்குள்ள - கயிற அவுத்துக்கிட்டுப் போற காளமாடுமாதிரி - சர்ருன்னு போய்டுச். ஆனா, தோழி, நீ அப்டி இருக்காத. உங் காதலன், கொஞ்சநாள் வரலன்னு கவலப்படிஞ்சு போய்டாத. அவன நெனச்சு நெனச்சு நீ மெலிஞ்சேப் போனாலும், உன்னோட மெலுசான கைக்கு நம்மூர் வளையக்காரங்கிட்ட சின்னதா வளை இருக்காதா என்ன? இருக்கூ.

மாரி யாம்ப லன்ன கொக்கின்
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினு மமைக
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே

(குன்றியனார்)


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.