விளையாட்டு

கூளியன் கண்களைத் திறந்து பார்த்தபோது கிணற்றுக்கு மேலே புகை மூட்டமாக இருந்தது. கிணற்று ஆழத்தில் இருள் சூழ்ந்திருந்தது. நீரில்லாத கிணற்றுக்கு ஆழம் கணக்குண்டா என்று தெரியவில்லை. எவ்வளவு நேரம் விழுந்து கிடந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

சமமற்ற கிணற்றுத் தரையில் கருங்கற்கள் ஆங்காங்கே குத்திக் கொண்டு எழுந்திருந்தன. கிணற்றடியில் தங்கிய குறைந்த ஈரப்பசையால், செங்கற்சுவர் தரையைத் தொடும் இடத்தில் மெல்லிய பச்சைத் தளிர்கள் முளைத்திருந்தன. குரல் கொடுக்கும் அளவுக்கு தெம்பு இருக்கவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவன், இப்போது மீண்டும் பிறந்தவனைப்போல் பேச்சின்றி அழுகை மட்டும் வருவதாக உணர்ந்தான். அழுகையை அடக்கிக்கொண்டு இந்த இருள் குகையிலிருந்து எவ்வாறு ஏறிச் செல்வது என்ற கவலை எழுந்தது.

முழு சிறுகதையைப் படிக்க: https://akazhonline.com/?p=13125

தேட ஆரம்பியுங்கள் / Start typing to search