பருவம்

ஆடி மாத இரவின் காற்று சற்றுக் குளிர்ச்சியாக வீசி, கட்டிடத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்த தென்னைமரங்களை அசைத்தது. நிலவில்லாத வானத்தில் ஒளிப்புள்ளிகள் மட்டுமே இருந்தன. அழகுசுந்தரம் பள்ளிச் சீருடையை இன்னும் மாற்றாமல், சட்டையைப் பேன்ட்டுக்கு வெளியே தளர்வாக விட்டுக்கொண்டு, யாருமில்லாத ஏணிப்படியில் அமர்ந்து இருட்டை நோக்கிக்கொண்டிருந்தான். ஆங்காங்கே வீடுகளின் ஒளித்துணுக்குகள் தெரிந்தன. ஏணியில் இருந்து இறங்கி மாடித் தரையில் அங்குமிங்கும் நடந்து, தென்னைக் கீற்றொன்றை எடுத்தான். நடுவில் ஈர்க்குச்சியும் இருபுறமும் ஒட்டிய பச்சை இலைப்பட்டைகளுமாக, இரவில் அது கரும்பச்சையாகத் தெரிந்தது. வலப்புற இலைப்பட்டையை மேலிருந்து கால் பங்கு நீளத்துக்குக் கிழித்து, அதை வலக்கை விரல்களால் பிடித்துக்கொண்டு, இடக்கைச் சுட்டுவிரலை மூக்கைப்போல் வளைத்துக் கொக்குபோல் ஆக்கி, வலப்புறப் பட்டையின் வளைவை அந்த விரலால் தாங்கி, அந்த வளைவைச் சட்டெனக் கீழ் நோக்கி இழுக்க, இடப்புறப் பட்டை ஏவுகணைபோல் யாரும் காணாத இருளில் உயரமெய்திச் சென்றது.

முழு சிறுகதையைப் படிக்க: https://mayir.in/short-stories/urapvrgmail-com/4699/

தேட ஆரம்பியுங்கள் / Start typing to search